Thursday, June 25, 2009

2009- வானிலைவிடும் எச்சரிக்கை-சரியான எனது கணிப்புகள்

பிரபல இந்திய நாளிதழ்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் 2009ம் வருடதென்மேற்கு பருவ மழை பொய்த்து வருவதாகவும் இதனால் மிகமோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் கவலை தெரிவிக்கின்றன.
ஆனால்,இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் இந்த மோசமான நிலையை கணிக்க தவறியதுடன் ஜூலை,ஆகஸ்ட்,மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழை பெய்யும் எனவும் ,குறைந்தது 80சதவீதம் மழை நீர் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் உறுதியற்ற அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 2009 முடிவிலேயே குறைந்த மழையளவை கண்ட பிறகு தென்மேற்கு பருவமழை ‘எல்நினோ’ அல்லது வேறு காரணங்களால் பொய்த்துவிட்டதாக அறிவிக்கும் என நான் திடமாக நம்புகிறேன்.
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் தென்மேற்கு பருவமழையின் பாதிப்புக்களைப்பற்றி மேமாதத்தில்கூட கணிக்க முடியவில்லை.
60வருடங்களில் பார்த்திராத மிக மோசமான 2009 வருடத்தின் தென்மேற்கு பருவமழையை பற்றிய என்னுடைய கணிப்பு 2009 ஜனவரி 1-15 ஸ்ரீபெரும்புதூர் நியூஸ் இதழில் வெளியாகியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
கடந்த 7வருடங்களாக துல்லியமாக கணித்து நடைமுறையில் பலித்த என்னுடைய பருவமழை கணிப்புகள் மற்றும் வெள்ளம் பூகம்பம் போன்ற கணிப்புகளும் அரசு அதிகாரிகளையோ அரசியல்வாதிகளையோ சென்றடையாதது மிகுந்த மனவருத்ததை தருகிறது.
பலவருடங்களுக்கு முன்பாகவே பருவமழைகளையும் இயற்கை சீற்றங்களையும் கணிக்கக்கூடிய என்னுடைய ஆராய்ச்சி அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கு சரியானமுறையில் சேவையாற்றிட நிச்சயம் உதவி செய்யும்.இதனால் தானிய மற்றும் நீர்நிலை கையிருப்பும் சரியான முறையில் கையாள முன்கூட்டியே திட்டமிடமுடியும்.
இந்திய அரசாங்கம் இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமோ அல்லது புதிய ஆராய்ச்சி நிறுவனம் மூலமாகவோ நடப்புமுறைகளுடன் என்னுடைய ஆராய்ச்சி முறைகளையும் இணைத்து என்னைவிட திறமையானவர்களின் உதவியுடன் நெடுங்கால வானிலை முன்னறிக்கைகளை இனிவரும் காலங்களில் தயாரிக்க முன் வரவேண்டும் என விரும்புகிறேன்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் இழப்புக்கள் குறைக்கப்படவும் மேற்கண்ட யோசனை பலனளிக்கும் என நம்புகிறேன்.


வானிலை முன்னறிக்கை
(ஜூலை-2009க்கானது)

இதுவரை நிலையற்றதன்மை கொண்டதாக காணப்படும் தென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தின் கீழ்கண்ட நாட்களில் மிதமான செயல்பாட்டில் இருக்கும்.
1.ஜூன் 27 முதல் ஜூன்30க்குள் பலத்த முதல் மிகபலத்த மழை அங்குமிங்குமாக பெய்யும். மேற்படி மழை கடலோர கர்நாடகம்,கோவா,மஹாராஷ்டிரா,மத்தியபிரதேஷ்,ஒரிஸ்ஸா, ஆந்திரா,மற்றும் வடக்கு கேரளா மாநிலங்களில் பலனளிக்கும்.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழையே கிடைக்கும்.

2.பலத்த சுழல் காற்றுடன் கூடிய பலத்தமழை,திடீர் அடைமழை(cloud buster) ஜூலை 1 முதல் 6ம் தேதிக்குள் மேற்கூறிய மாநிலங்களை தவிர, வடமேற்குமாநிலங்களிலும் உண்டாகும்.

3.ஜூன் 30 ம்தேதியிலிருந்து ஜூலை 4ம்தேதிக்குள் பலத்த நிலச்சரிவு அல்லது மிதமான பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவின் மேற்கு கடலோரம் மற்றும் அமேரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் பாதிப்பை உண்டாக்கலாம்.

4. ஜூலை 13 வரை மறுபடியும் பருவமழை நிலையற்றதன்மை கொண்டதாக இருக்கும். அங்குமிங்குமாக ஓரிரு இடங்களில் மிதமான மழையே கிடைக்க வாய்ப்புள்ளது. மிதமானது முதல் பலத்தமழை ஜூலை14 முதல் ஜூலை 18வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கண்ட நிகழ்வுகள் மேலே கூறிய மாநிலங்களை தவிர பிற வடமாநிலங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

5.இந்த வருடத்தின் தென்மேற்கு பருவமழையின் மிகமோசமான காலகட்டம் ஜூலை 22 முதல் தொடங்கும். இந்த வறட்சியான நிலைப்பாடு செப்டம்பர் மூன்றாவது வாரம் வரை தொடரும். இந்திய தீபகற்பத்தை சுற்றி குறைந்தது ஏழு புயல் சின்னங்கள் மேற்படி காலகட்டத்தில் உருவாகும்.

6.முதல் பலத்த புயற்சின்னம் ஜூலை 25 முதல் ஜூலை 30க்குள் வங்காள விரிகுடாவில் ஏற்படும்.

7.ஜூன் முதல் வாரத்தில் இருந்து செப்டம்பர் முடிவுவரை பெய்யும் மழை இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் வருடமழை அளவுக்கு 40 சதவீதம் குறைந்தே இருக்கும். காலத்தில் தவறிய மழை செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரம் வரை பலன் கொடுக்கும். இருந்தாலும் கேரளாவும் தமிழ்நாடும் இந்த காலத்தில் குறைந்த அளவு மழையே பெறும்.

Monday, June 15, 2009

2002ல்ஆனந்தவிகடனில் வெளியான எனது கணிப்புகளும்,அவைகளை நிரூபித்த செய்தி ஆதாரங்களும்

2002-ஆனந்தவிகடனில் வெளியான கணிப்புகள்

2002செப்டம்பர் 2முதல் 12 வரை அந்த வருடத்தின் அதிகபட்ச மழை -ஆனந்தவிகடன் பேட்டியில் உள்ள என் கணிப்பு சரியாக இருந்ததை நிரூபிக்கும் பத்திரிகை செய்திகளின் தொகுப்பு(செப்டம்பர்3முதல்18வரை)
அதேபோல் ஆனந்தவிகடன் பேட்டியில் 2002ல் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்கடாலருக்கு இணையாக உயரும் என்ற என் கணிப்பு உண்மையானதற்கான பத்திரிகை சான்று
(பத்திரிகை செய்திகளை(pdf file) பெரிதாக்கி படிக்க அவற்றின் மீது double click செய்யவும்)

ஜனவரி2008ல் வெளியான எனது கணிப்பும்,மே2008ல் சீனாவைத்தாக்கிய பயங்கர பூகம்பமும்-செய்தி ஆதாரம்



இதில் மேற்படி பூகம்ப கணிப்பைத்தவிர,இந்திய தென் தீபகற்பத்தில் பெய்த அதிகமான பருவமழைக்கு முந்திய காலமழை பற்றிய துல்லியமான கணிப்புகளுக்கு இந்த செய்தியே முக்கிய ஆதாரம்.

எனது 2009வானிலைகணிப்புகள் - பத்திரிகைகளில் வெளியீடு



'ஸ்ரீபெரும்புதூர் நியூஸ்'-இந்த உள்ளூர் பத்திரிகை 2005லிருந்து தொடர்ந்து அளித்துவரும் ஆதரவினால் என்னுடைய வானிலை கணிப்புகள் மாதம் இருமுறை மக்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.மேற்படி பத்திரிகை செய்திகள் என் கணிப்புகள் சரியாகவரும்போது அவற்றை உறுதி செய்ய மிகவும் உறுதுணையாக உள்ளது.இந்த ஆண்டு 2009 முதல் பதிப்பில் மொத்த வருடத்திற்குண்டான என்னுடைய வானிலை கணிப்பை(ஏற்கனவே ஸ்ரீபெரும்பதூர் நியூசில் வெளியானது) உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Friday, June 12, 2009

இணையக்கூடாத ஆண்,பெண் யார்? குழந்தைபிறப்பில் மறைந்திருக்கும் அதிசய கணிப்புகள்

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது 100க்கு 90 ஜோதிடர்கள் நாடிப்பொருத்ததிற்கு முக்கியத்துவம் தருவதில்லை.நாடிப்பொருத்தம் கீழ்கண்ட காரணங்களால் மிகமிக முக்கியமான ஒன்று.
பூரணமான உடல் தகுதி உள்ள ஒரு ஆணும் பெண்ணும் தவறான நாடிப்பொருத்ததில் திருமணபந்தத்தில் சேர்த்துவைக்கப்பட்டால், குழந்தைப்பேறு இல்லாமையோ, தடையுடன் கூடிய குழந்தைப்பேறு,மற்றும் திருமணத்திற்குப்பிறகு ஆண்,பெண் இருவருக்குமோ அல்லது இருவரில் ஒருவருக்கோ உடலில் புதுவிதமான எதிர்ப்புசக்தி குறைபாடு உண்டாகும்.
நமது ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் மூன்று கூறுகளாக பிரித்து இருக்கிறார்கள்.
இரண்டு மின்சார பேஸ்கள் (phase) மற்றும் ஒரு நியூட்ரல்(neutral) போன்ற அமைப்பாக உதாரணம் கொள்ளவும்.
ஒரு phase+ ஒரு neutral நம்பகமான இணைப்பு.
ஒரு phase+ஒரு phase ஷார்ட் சர்க்யூட்-குழந்தை பிறப்பு கடினம்
ஒரு phase+ஒரு phase 440 volts அமைப்பு.-குழந்தை பிறப்பு with RH group blood,born with jaundice
இந்த அமைப்பு இயங்க starter with stating coil தேவை.
இதைப்பற்றிய விரிவான விளக்கங்கள் இனி வரும் நாட்களில் ...

2009ல் தண்ணீருக்கு தாளம் போடப்போகிறோம்? இந்த ஆண்டிற்கான அதிர்ச்சிதரும் வானிலைகணிப்பு

மே மூன்றாம் வாரத்தில் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை ஜூலை 2ஆம் வாரத்தில் மிகமிக பலவீனமடைந்துவிடும். நமது வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளதுபோல் சராசரியான மழை கிடைக்க வாய்ப்பு நிச்சயம் கிடையாது. ஜூலை இரண்டாம் வாரம் முதல் செப்டம்பர் மூன்றாம் வாரம் வரை குறிப்பிட்ட சிலதினங்களில் சில இடங்களில் மட்டும் பலத்த காற்றுடன் கூடிய மழை பாதிப்பை உண்டாக்கும்.இந்த வருடத்தில் வடக்கு 14டிகிரி அட்சரேகைக்குக்கீழ் மிக குறைந்த மழையே கிடைக்கும்.
ஜூன் 13 முதல் ஜூலை1 வரை பலத்த முதல் மிகபலத்த மழை கர்நாடகா,ஆந்திரா,மகாராஷ்டிரா,மத்தியபிரதேஷ்,ஒரிஸ்ஸா,கிழக்கு உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட்,சத்தீஷ்கர்,மற்றும் மேற்கு வங்காளம், வடகிழக்குமாநிலங்கள் பயன்பெறும்.
வடக்குதமிழ்நாடும் வடக்கு மற்றும் கடலோர கேரளாவில் லேசானது முதல் மிதமான மழையே கிடைக்கும்.
மேற்கண்ட காலத்தில் பகல் நேர வெப்பநிலை சராசரி அல்லது சராசரிக்கு குறைவாகவே இருக்கும்.

உங்களுடன் ஒரு அறிமுகம்

எல்லாப்புகழும் இறைவனுக்கே.

வணக்கம்,

உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனங்களின் வானிலை அறிக்கை என்பது காலங்காலமாக கேலிக்குட்பட்ட பொருளாக இருந்துவருகிறது.

இந்திய ஆயுர்வேதம் எப்படி வேதத்தின் வாயிலாக நமக்கு கிடைத்ததோ,அதேபோல் கிடைத்த இந்திய வானசாஸ்திரம் தன்னுள் வியக்கத்தகு உபயோகமான பொக்கிஷங்களை வைத்திருக்கிறது.

இதில் மேம்போக்காக தனிமனித வருமானத்திற்காகவும் ஒரு குறிப்பிட்டக்கால புகழ்ச்சிக்காகவும் சிலர் ஜோதிடக்கலையாக உபயோகிக்கிறார்கள்.

மேற்படி ஜோதிடக்கலையே விஞ்ஞானபூர்வமானதுதான் என்பதுபற்றியும், இயற்கைச்சீற்றங்கள்,வானிலை நிகழ்வுகள் பற்றிய என்னுடைய 20வருட ஆராய்ச்சியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ள பேராசைப்படுகிறேன்.

மேற்படி கலை 100 சதவீதம் பூரணமான முடிவுகளை என் ஒருவன் முயற்சியால் மட்டும் அடைய முடியாது. என்னைவிட நவீனவானசாஸ்திரத்திலும், சமஸ்கிரத புலமையிலும் தகுதிஉள்ளவர்களால் வியக்கத்தகு நிலையை எட்டவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த வலைப்பூ துவங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு பகுதியில் தொலைநோக்கு வானிலை அறிக்கைகள்,பெருமழை,புயல் போன்ற இயற்கை சீற்றங்கள், மற்றும் பூகம்பங்கள்,நிலச்சரிவுகள் இவற்றை பற்றிய என்னுடைய முன்னறிக்கைகள் இடம்பெறும்.

இரண்டாம் பகுதியில் தனிமனித ஜோதிடத்தில் விஞ்ஞானபூர்வமான நிலைப்பாடுகள் குறித்து என்னுடைய கருத்துக்களும்,உபயோகமான சூத்திரங்களும் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.

நன்றி

இனி கடந்த டிசம்பர் 2008ல் வெளியிட்ட என்னுடைய 2009 முழுமைக்குமான வானிலை அறிக்கையினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுடைய எந்தவிதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ள காத்திருக்கிறேன்.